10TH - SLOW LEARNERS - SPECIAL GUIDE - UNIT -3 -REDUSE SYALLABUS

WWW.THAMIZHVITHAI.COM

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்புதமிழ்

இயல் – 3

கூட்டாஞ்சோறு

) சரியான விடையைத் தேர்ந்தெடு:-           

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு  

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு             ) எழுவாய்       ) உவம உருபு            ) உரிச்சொல்

) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                   

1. எழுது என்றாள்என்பது விரைவு காரணமாக எழுது எழுது என்றாள்என அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?

சிரித்துசிரித்துப் பேசினார்

2. பாரதியார் கவிஞர்,நூலகம் சென்றார்,அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

·        கவிஞர்       பெயர் பயனிலை

      சென்றார்     வினை பயனிலை

        யார்          - வினா பயனிலை

) சிறுவினா                                                    

1. ‘ கண்ணே கண்ணுறங்கு!

    காலையில் நீயெழும்பு!

    மாமழை பெய்கையிலே

    மாம்பூவே கண்ணுறங்கு!

    பாடினேன் தாலாட்டு!

    ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.


 கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

உரிச்சொல் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

இயல் – 3

திருக்குறள்

) குறுவினா:-

1. “ நச்சப் படாதவன்செல்வம்இத்தொடரில் தடித்த சொல்லுக்குப் பொருள் தருக.

       நச்சப் படாதவன்     -       பிறருக்கு உதவி செய்யாதவன்

2. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

   கோடிஉண் டாயினும் இல்இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

        கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம்     -       இன்னிசை அளபெடை

3.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.      

                 

)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்

1)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது

2)உயிரினும் ஓம்பப்படும்

)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

3)நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

விடை:

)உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் - உயிரினும் ஓம்பப்படும்

)ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றது - நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

)ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் - ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை


) எய்துவர் எய்தாப் பழிஇக்குறளடிக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

) கூவிளம் தேமா மலர்  ) கூவிளம் புளிமா நாள்  

) தேமா புளிமா காசு      ) புளிமா தேமா பிறப்பு


) சிறு வினா

        வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

    கோலோடு நின்றான் இரவு

               இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

       அணி       : உவமை அணி. உவமை அணியில் உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.

        உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது

       உவமேயம் : கோலோடு நின்றான் இரவு

       உவமஉருபு : போலும்

       விளக்கம்   : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான ஆயுதங்களைகொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம்.

மொழியை ஆள்வோம்

) மொழி பெயர்க்க:-                                       

1. பின் வருவனவற்றுள் முறையான தொடர்

        Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

        மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

) பழமொழியை நிறைவு செய்க:-     

                         

1

உப்பில்லாப்

பண்டம் குப்பையிலே

2.

ஒரு பானை

சோற்றுக்கு ஒரு சோறு பதம்

3

உப்பிட்டவரை

உள்ளளவும் நினை

4

விருந்தும்

மருந்தும் மூன்று வேளை

5

அளவுக்கு

மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

) கதையாக்குக:-                                         

       மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது  மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகுற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக்கதையாக்குக.

       ஒரு வயதான முதியவரை போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாய் கரம் பிடித்து சாலையின் மறுபுறம் உள்ள ஒரு வங்கியில் கொண்டு போய் விட்டு,அந்த வங்கியில் பணம் எடுத்தலுக்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து விட்டு பணம் பெற்றுக் கொடுத்த அந்த தருணம் அந்த முதியவர் என்னை கையெடுத்து கும்பிட்டு நன்றி எனக் கூறிய வார்த்தை என் மனதை மட்டுமல்ல என் கண்களையும் கலங்க வைத்தது.

) நயம் பாராட்டுக:-

       கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

       அத்தமிக்கும் போது அரிசிவரும்குத்தி

       உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

       இலையிலிட வெள்ளி எழும்

                                 காளமேகப் புலவர்

திரண்ட கருத்து:

கருத்து – 1

       கடல் சூழ்ந்த நாகப்பட்டிணத்தில் உள்ள காத்தான் சத்திரத்தில் மாலையில் அரிசி வரும். அதனை குத்தி உலையில் போட ஊரே அடங்கும். சமைத்து பரிமாறும் போது விடிந்து விடும். இது சத்திரமா? என குறிப்புத் தருகிறது.

கருத்து-2

        நாகப்பட்டிணத்தில் காத்தான் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டு வரை அரிசி இருக்க்கும். அரிசி குத்தி உலையிடுவதும்,அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பது ஊராரின் பசியை அடக்கும்.அன்னம் இலையிலிட வெள்ளி முளைக்கும்.

பொருள் நயம்:

        அத்தமிக்கும் போது அரிசிவரும்குத்தி

       உலையிலிட ஊரடங்கும்

      இலையிலிட வெள்ளி எழும். ஆகியன ஆழமான பொருள் உடையன.

 சந்த நயம் :

        பாடுவதற்கேற்ற சந்த நயம் பயின்று வந்துள்ளது.

மோனை நயம் :

        முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.

த்துக்கடல்   -      காத்தான்

த்தமிக்கும்  -      ரிசி

எதுகை நயம் :

         முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.

த்துகடல்    -      த்திரத்தில்

லையிலிட  -      லையிலிட 

முரண் நயம் :

        முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.

       அத்தமிக்கும் × வெள்ளி எழும்.

இயைபு நயம் :

        பாடலில் கடைசி எழுத்தோ,சீரோ,அசையோ,ஓசையோ இயைந்து வருவது.

       அரிசி வரும்வெள்ளி எழும்.

அணி நயம்:

        சொற்கள் பிரிவுபடாமல் நின்று இரு பொருளை தருவதால் இதில் செம்மொழிச் சிலேடை அணி பயின்று வந்துள்ளது.

                   

மொழியோடு விளையாடு

) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-


வினா

குறிப்பு

விடுபட்ட எழுத்து

நூலின் பெயர்

____கு

பறவையிடம் இருப்பது

கு

திருக்குறள்

கு____தி

சிவப்பு நிறத்தில் இருக்கும்

குருதி

வா____

மன்னரிடம் இருப்பது

வாள்

____கா

தங்கைக்கு மூத்தவள்

க்கா

_____

அறிவின் மறுபெயர்

தி

பட_____

நீரில் செல்வது

படகு

) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-    

                             

1

சிலை - சீலை

சிலையை சீலையால் மறைத்தான்

2.

தொடு - தோடு

தோடினைத் தொட்டுப் பார்த்தாள் கமலா

3

மடு - மாடு

மடுவில் மாடு நீர் குடித்தது.

4

மலை - மாலை

மலை மீது மாலையில் ஏறினான்

5

வளி - வாளி

வளியை வாளியால் அள்ள முடியாது

6

விடு - வீடு

விடு அவன் வீடு செல்லட்டும்

  

PDF - FORMAT




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...