6TH - KALVI TV -24-01-2022- TAMIL - VELU NACHIYAR

  https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           24- 01- 2022            

வகுப்பு                    ஆறாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :      பருவம் -3  - வேலுநாச்சியார்

காணொளி


பணித்தாள்

1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த-------- மன்னர்

அ. செல்லமுத்து        ஆ. காத்த முத்து        இ. வைரமுத்து         ஈ. மாரிமுத்து

2. சிவகங்கை மன்னர்___________

அ. செல்லமுத்து           ஆ. சின்ன மருது           இ. பெரிய மருது                ஈ. முத்து வடுக நாதர்

3. முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட இடம் __________

 . அ. வீரபத்திரன் கோயில்        ஆ. காளையார் கோயில்        இ. மீனாட்சி கோயில்        ஈ. காமாட்சி கோயில்

4. வேலுநாச்சியாரின் அமைச்சர் ______________

அ. சின்ன மருது                     ஆ. பெரிய மருது                    இ. தண்டவராயர்                         ஈ. முத்து வடுக நாதர்

5. ஐதர் அலியின் படை எங்கிருந்து வந்தது?

அ. டெல்லி                                   ஆ. பஞ்சாப்                          இ. மைசூர்                          ஈ. ஆந்திரா

6. ஐதர் அலி படையிலிருந்து வந்த படை வீரர்களின் எண்ணிக்கை ___________________

அ.  3000                                ஆ. 2000                               இ. 4000                                 ஈ. 5000

7.  வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை ஏற்றவர்?

அ. வேலுநாச்சியார்                ஆ. குயிலி                             இ. உடையாள்                              ஈ. பெரிய மருது

8. சிவகங்கை கோட்டை கதவுகள் எந்த நாளில் திறக்கப்படும் என வேலுநாச்சியார் கூறினார்?

அ. விஜய தசமி                           ஆ.  பொங்கல்                        இ. தீபாவளி                                      ஈ. அமாவாசை

9. யாருக்கு நடுகல் வைக்க வேண்டும் என வேலுநாச்சியார் கூறினார் _____________

அ. அறிவுடையாள்                  ஆ. குயிலி                             இ. உடையாள்                              ஈ. பெரிய மருது

10. வேலுநாச்சியார் சிவகங்கையை மீண்ட ஆண்டு____________

 அ) 1880                               ஆ) 1780                                இ) 1680                                                  ஈ) 1600

இணைய வழித் தேர்வு


பணித்தாள் - PDF

 




About THAMIZHVITHAI

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...